கம்ப்யூட்டருக்குப் பன்றிக் காய்ச்சல்!

திருஷ்டி பட்டுவிட்டது போலிருக்கிறது... தொடர்ந்து என் பிளாகுகளில் பதிவிட முடியாமல், என் சிஸ்டத்தில் பன்றிக் காய்ச்சல் பற்றிவிட்டது. வைரஸ் தொற்றிவிட்டது. ஜன்னலைத் திறந்தாலே WARNING என்று அலறுகிறது. எந்த ஆன்ட்டி வைரஸ் மருந்து கொடுத்தாலும் ஜுரம் விடுவதாயில்லை.

லினக்சும் இருக்கிறது. ஆனால், அதில் தமிழ் எழுத்துக்கள், ஆதி கால கல்வெட்டுத் தமிழ் போலப் படிக்கவே முடியாமல் இருக்கிறது.

என் (சிஸ்டத்துக்கான) குடும்ப டாக்டரான என் தம்பி, வரும் ஞாயிறு அன்று வந்து சிஸ்டத்துக்கு சிகிச்சை செய்வதாய்ச் சொல்லியிருக்கிறார்.

அதுவரை பொறுத்தருள்க.

அலுவலக சிஸ்டத்தில் பிளாக் எழுத விரும்பவில்லை. மற்றவர்களைச் செய்யாதே என்று தடுக்கிற நானே அந்தத் தவற்றைச் செய்யலாமா? விளக்கத்துக்காக இந்தப் பதிவை மட்டும் அலுவலகத்தில் வைத்துப் பதிகிறேன்.

என் சிஸ்டத்தின் ஜுரம் தணியப் பிரார்த்தியுங்கள்.

0 comments: